மனந்திரும்புதலும் ஐடியாவும்

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நல்ல நிலமையில் இருக்கின்ற ஒரு நண்பரை எனக்குத் தெரியும், அவர் தனது வாழ்க்கையில் எப்படி முன்னேறி வந்தார் என்ற அவரது பிரசங்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் கர்த்தருக்கு முன்பாகத் கீழ்ப்படிதலுடனும், மனந்திரும்புதலுடனும் நடந்ததையும், கர்த்தர் வியாபாரம் மற்றும் செல்வம் சம்பாதிப்பது பற்றி கர்த்தர் எவ்வாறு பல ஐடியாக்களை அவருக்குள் ஊற்றினார் என்பதையும் அவைகளை பயன்படுத்தி தான் முன்னேறியதையும் விளக்கிக் கூறினார்.

நீதிமொழிகள் 1:23 கூறுகிறது, ” என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.

என் அன்பு நண்பர்களே, நம் பாவங்களுக்காக மனந்திரும்பி, நாம் வாழும் வழியைத் திருப்பும்படி கர்த்தர் நம்மைக் கடிந்துகொள்ளும்போது, நாம் மனந்திரும்ப வேண்டும், அவ்வாறு நாம் மனந்திரும்பிய வாழ்க்கை வாழும்போது, கர்த்தர் தம்முடைய ஆலோசனைகளை, ஐடியாக்களை நமக்குள் ஊற்றுகிறார். அந்த ஆலோசனைகள் நம் வாழ்வில் நம்மை உயர்த்திடும்.

மனந்திரும்ப வேண்டிய காரியங்கள் இன்னும் நம் வாழ்வில் இருக்குமானால் அதைச் செய்திவோம், கர்த்தர் நம் வாழ்க்கையை ஒரு ஆசீர்வாதத்திற்கு நேராக வழிநடத்துவார்.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!

You may also like...