வியாதியஸ்தர்கள் மேல் மனதுருக்கம்

உயர்த்தும் சிந்தனை:

இயேசுவிடம் நாம் காணக்கூடிய ஒரு நற்குணம் என்னவென்றால், அவர் வியாதியஸ்தர்கள் மேல் மனதுருகினார், அவரிடம் வந்த அனைவரையும் குணப்படுத்தினார்.

மத்தேயு 14:14, ” இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார்.”

கிறிஸ்து பிதாவிடம் சென்ற பிறகு, இன்னும் பூமியில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இருந்தனர். அவருக்குப் பிறகு வியாதியஸ்தர்களை குணமாக்குகிற அந்த இரக்கம் நிறைந்த ஊழியத்தை அவருடைய சீஷர்கள் செய்தார்கள்.

ஆனால், இப்போது யார் செய்கிறார்கள்? இன்னும் நோய்வாய்ப்பட்டவர்கள் ஏராளமானோர் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள், நம்மில் பல விசுவாசிகளும் கடுமையான வியாதியில் இருக்கிறார்கள், அவர்களை யார் குணமாக்குவார்கள்?

என் அன்பான நண்பர்களே, இயேசு பரத்திற்கு சென்றபின்பு அந்த ஊழியத்தை அப்படியே விட்டுவிடவில்லை, அவர் தமது வல்லமையை நமக்குத் திருப்பி அனுப்பினார், அதுதான் பரிசுத்த ஆவியானவர்.

வியாதியஸ்தர்கள் மேல் மனதுருகி விசுவாசத்துடன் நாம் நம் கையை நீட்டினால், கர்த்தர் அவர்களை நிச்சயமாகக் குணப்படுத்துவார். இன்று நம் கைகள் இயேசுவின் கரங்கள், நம் இதயங்கள் இயேசுவின் இதயம், அவரைப் போல நாமும் மனதுருகி, நோயாளிகளைக் குணப்படுத்த முற்படுவோமானால் அவர் நம் மூலம் நிச்சயம் செயல்படுவார்.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!

You may also like...