கர்த்தர் உங்களை தெரிந்துகொண்டதற்காண ஒரு காரணம்

இந்த உலகில், இன்று கிட்டத்தட்ட 810 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் எத்தனை பேர் இரட்சிக்கப்பட்டவர்கள் என்பது தெரியாது. ஆனால் நீங்களும் நானும் கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டபடியால் தெரிந்துகொள்ளப்பட்டு இரட்சிக்கப்பட்டவர்கள் என்பது நிச்சயம். நம்முடன் கல்லூரியிலும் பள்ளிகளிலும் படித்தவர்கள் பலருண்டு, நம்முடன் பணிபுரிபவர்கள் பலர் உண்டு. ஆனால் பிதாவகிய தேவனுடைய மகனாக / மகளாக இருக்கும் பாக்கியம் நமக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது, அல்லவா?

சங்கீதம் 4:3, “பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.” என்று கூறுகின்றது.

என் அன்பான நண்பர்களே, நாம் இரட்சிக்கப்பட்டது அவருடைய கிருபையே, மேலும் நமக்குள்ளே இருந்த பக்தியும் அவர் நம்மை தெரிந்து கொண்டதற்காண ஒரு காரணமாகும். ஆகையால், அந்த தேவபக்தியைத் தொடருங்கள், ஏனென்றால் பக்தியுள்ளவர்கள் ஜெபிக்கும்போது கர்த்தர் அவர்களுடைய ஜெபங்களைக் கேட்பார்.

உங்களுக்கு சமாதானம் உண்டாவதாக!

You may also like...